வட்டெழுத்துக் கல்வெட்டுகள்

வட்டமான கோடுகளைக் கொண்டு இவ்வெழுத்து எழுதப்பட்டதால் இவ்வெழுத்து வட்டெழுத்து என்றும் வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வட்டம் என்ற பெயர் குற்றாலத்தில் உள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது. கேரளத்தில் இதனை நாநாமோன், தெக்கன் மலையாளம் என்றும் பெயரிட்டழைப்பர். இவ்வெழுத்திலான தொன்மையான கல்வெட்டுகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுதியாக காணப்படுகின்றன. தஞ்சை மற்றும் காவேரி ஆற்றங்கரைப் பகுதியான முந்தைய சோழ மண்டலத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதுவரை அறியப்படவில்லை.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆர்வலர்களுக்கு நடத்திய சிறப்பு பயிற்சிகள் காரணமாக மிக முக்கியமான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அவற்றில் குறிப்பிடத்தக்கவை, தமிழகத்தின் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கிடைத்திடும் நடுகல் கல்வெட்டுகளும் ஆகும். இப்புதிய கண்டுபிடிப்புகள் தொல்லெழுத்தியலார் வட்டெழுத்தின் வளர்ச்சியை முழுமையாக அறிந்திட உதவியாக உள்ளன.

(அ) – ’ ங்குப்பை வித்த கூல’ (ஆ) ’ ற்ற கொத்தி’ என்று சிவப்பு பானை ஓடுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்துச் சொற்கள் ஆறாம் நூற்றாண்டு போளுவாம்பட்டி கோயம்புத்தூர் மாவட்டம்

காலப்போக்கில் வட்டெழுத்து

(அ) – ’ ங்குப்பை வித்த கூல’ (ஆ) ’ ற்ற கொத்தி’ என்று சிவப்பு பானை ஓடுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்துச் சொற்கள் ஆறாம் நூற்றாண்டு போளுவாம்பட்டி கோயம்புத்தூர் மாவட்டம்

நீர்ப்பாவனம் பற்றிக்கூறும் சேந்தன் மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டு, கி.பி. 7 ஆம் நூற்றாண்டு, வைகைக்கரை, மதுரை

பாண்டியன் மாறஞ்சடையனின் கொடை பற்றிக் கூறும் வட்டெழுத்துக் கல்வெட்டு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டு, திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம்

இருமருங்கிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ள சமணர் சிற்பங்கள், கி.பி. 9 ஆம் நூற்றாண்டு, திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

வட்டெழுத்தில் பாடல் வடிவில் உள்ள இராசகேசரிப் பெருவழி கல்வெட்டு, கி.பி. 9 ஆம் நூற்றாண்டு, சுண்டைகாமுத்தூர், கோவை மாவட்டம்.